Skip to content
Home » மணப்பாறையில் பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு…. தொடரும் அவலம்…

மணப்பாறையில் பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு…. தொடரும் அவலம்…

  • by Senthil

கரூர் மாவட்டம் தோகமலை அடுத்த கல்லைப் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மனைவி சகுந்தலா( 40). இவர் மணப்பாறை பாரதியார் நகர் பகுதியில் தற்போது கட்டிட வேலை பார்த்து வருகிறார். இதன் காரணமாக இன்று காலை தோகை மலையில் இருந்து அரசு பேருந்து ஏறி மணப்பாறை திருச்சி ரோடு ரங்கவிலாஸ் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்தில் கூட்ட நெரிசலில் இறங்கும்போது தான் அணிந்திருந்த தாலிக்கொடி செயின் 7 பவுனை மர்ம நபர் பறித்து விட்டதாக கூறி மனப்பாறை காவல் நிலையத்தில் ஐயப்பா என்னை காப்பாற்று, ஐயப்பா என்னை காப்பாற்று என்று கதறி அழுது பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை பெற்ற மணப்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஒரு வார காலமாக தொடர்ச்சியாக மணப்பாறை பகுதிகளில் பேருந்தில் கூட்ட நெரிசலில் செயின் பறிப்பு சம்பவம் என்பது தொடர்ச்சியாக உள்ளது நேற்றை முன் தினம் அதே மார்க்கத்தில் வந்த பேருந்தில் கூட்ட நெரிசலில் ஒரு மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி 4 பவுன் பறிப்பு சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மணப்பாறையில் தொடரும் செயின் பறிப்பு சம்பத்தினால் பெண்கள் மிகுந்த அச்சப்பட்டு வருகின்றனர், அதிலும் இன்று காலை காவல் நிலையத்தில் கட்டிடப் பெண் தொழிலாளி 7 பவுன் செயினை பறி கொடுத்துவிட்டு ஐயப்பா காப்பாற்று, ஐயப்பா காப்பாற்று என்று கதறி அழுத சம்பவம் காண்போரின் மனதில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!