பாமக வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ள நிலையில், அன்புமணி தரப்பிற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி உள்ளது. பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் ஜி.கே.மணி மனு தாக்கல் செய்திருந்தார். ஜி.கே.மணியின் வழக்கில் அன்புமணிக்கு எதிராக உத்தரவு வந்த நிலையில் டெல்லி ஐகோர்ட்டில் ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையில், பாமக உரிமை கோரல் பிரச்சினை எழுவதற்கு முன்பே கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

