தாய்மாமன் தங்க மோதிர திட்டம் செப். 25-ம் தேதி தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை மதுரையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் அரசு ஹாஸ்பிடல், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது. தொழில் முதலீட்டு பயணமாக முதல்வர் விஜய் லண்டன் சென்ற நிலையில், செப்.15-ம் தேதி நடைபெற இருந்த இத்திட்டத்தின் தொடக்கவிழா ஒத்திவைக்கப்பட்டது.
