Skip to content
Home » பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் பகுதியில் கடந்த மாதம் 20ஆம் தேதி தனியார் பேருந்து ஆடுதுறையில் இருந்து குத்தாலம் மார்க்கமாக மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் படிக்கட்டிற்கு அருகில் உள்ள இருக்கையில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் பயணம் செய்துள்ளார். பேருந்து நிறுத்தம் நெருங்கிய நிலையில் இறங்குவதற்காக இருக்கையில் இருந்து முதியவர் எழுந்து நின்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தில் இருந்து முதியவர் தவறி விழுந்தபோது பேருந்து நடத்துனர் அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால் பேருந்தில் இருந்து சாலையில் விழுந்த முதியவர் படுகாயமடைந்து

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகச்சைபெற்று திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக குத்தாலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இறந்த நபர் எந்த ஊர் மற்றும் பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் தற்போது வரை தெரியவில்லை. காவல் துறையினர் இறந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது முதியவர் பேருந்தில் இருந்து தவறி விழும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!