Skip to content
Home » மயிலாடுதுறை அருகே 3 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை…. பொதுமக்கள் சாலை மறியல்..

மயிலாடுதுறை அருகே 3 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை…. பொதுமக்கள் சாலை மறியல்..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் கிராமத்தில் 6-வது வார்டு மேலத்தெருவில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்‌ இப்பகுதியில் மோட்டார் பழுது காரணமாக கடந்த 3 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குத்தாலம் காவல் ஆய்வாளர் அமுதாராணி அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். உடனடியாக மோட்டார் பழுதினை சரி செய்து தருவதாகவும், அதுவரை பொதுமக்களுக்கு டேங்கர் லாரியின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வது என்றும் முடிவானது.
இதில் உடன்பாடு எட்டியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!