Skip to content
Home » மயிலாடுதுறை அருகே வீட்டிற்குள் புகுந்து 52 பவுன் நகை- பணம் கொள்ளை…

மயிலாடுதுறை அருகே வீட்டிற்குள் புகுந்து 52 பவுன் நகை- பணம் கொள்ளை…

மயிலாடுதுறை மாவட்டம், திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் ஜலில்( 50). வெளிநாட்டில் உள்ள இவருக்கு சஹிதாபானு (48) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் இளைய மகள் திருச்சியில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார். விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த இளைய மகளை சஹிதாபானு நேற்று திருச்சியில் உள்ள கல்லூரியில் விடுவதற்காக வீட்டில் வேலை செய்யும் தையல்நாயகியை துணைக்கு அழைத்து சென்றுள்ளார். அதிகாலை 3 மணிக்கு ரயிலில் அழைத்துச் சென்று திருச்சியில் உள்ள கல்லூரியில் விட்டு விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். வீட்டை திறந்து பார்த்தபோது பின் பக்க கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவர் ரூமிற்குள் சென்று பார்த்தபோது

பீரோ கதவுகள் திறக்கப்பட்டு அதிலிருந்து 52 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ 1லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சஹிதாபானு அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. மீனா, டிஎஸ்பி. சஞ்சீவ் குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டின் பக்கத்தில் வீடு கட்டுமானபணி நடைபெற்று வருகிறது. திருச்சி செல்வதற்காக நேற்று இரவு வேலையாள் தையல்நாயகி வந்து தங்கியுள்ளார். கொல்லைப்புற கிரில்கேட் பூட்டை காணவில்லை. கதவை உடைக்காமல் கொள்ளை சம்பவம் நடைபெற்றள்ளதால் போலீசார் தீவீர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!