Skip to content
Home » மயிலாடுதுறையில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி…

மயிலாடுதுறையில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி…

  • by Senthil

மயிலாடுதுறையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார பேரணி. பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் நாட்டுப்புற கலைஞர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியுடன் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்று நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து துவங்கி வைத்தார்.

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் கள்ளச்சாராயத்திற்கு எதிராக நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய பேரணியில் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது. பேரணியை மாவட்ட ஆட்சியர் ஏபி மகாபாரதி கொடியசைத்து துவங்கி வைத்தார். நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளான பறை இசை கருப்பண்ணசாமி காளி ஆட்டத்துடன் மாணவர்களின் சிலம்பாட்டத்துடன் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பாடலுடன் நடைபெற்ற பேரணியில் 300க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு கம்மங்கூழ் அறிந்தினால் தெம்பு கள்ளச்சாராயம் அருந்தினால் வம்பு, கள்ளச்சாராயத்தை அருந்தி எதிர்கொள்ளாதே பேராபத்தை, கள்ளச்சாராயத்தை குடிக்காதே கண் பார்வை

இழந்து தவிக்காதே, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் கிடைப்பது சிற்றின்பம் அதுவே உன் குடும்பத்திற்கு பெருந்துன்பம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தனர். மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் பேரணி முடிவடைந்தது அங்கு நாட்டுப்புற கலைஞர்கள் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தியது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா, ஏடி எஸ்பி வேணுகோபால், மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா, டிஎஸ்பிக்கள் சஞ்சீவ்குமார், நீலகண்டன், காவல் ஆய்வாளர் செல்வம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!