அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அய்யனார் கோயில் தெரு உய்யக்கொண்டான் ஏரிக்கரையைச் சேர்ந்தவர் டூவீலர் மெக்கானிக் ரமேஷ் (35). இவரது மனைவி ஷபிராபேகம் (32). கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கணவர் ரமேஷ் வெளியூரில் டூவிலர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். சபீராபேகம் நேற்று நள்ளிரவில் தனது வீட்டில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷபிராபேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் . கொலையா? தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் கள்ளத்தொடர்பு காரணமா? எனவும் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் இரவு நேரத்தில் பாப்பாங்குளத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவருடன் தகாத உறவில் இருந்ததாகவும், இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாகவும் இதில் ஏற்பட்ட விபரீதத்தால் இந்த முடிவு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் ஷபிராபேகம் தானாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அடித்து தூக்கிட்டு கொலை செய்தனரா? என்பது குறித்து பாப்பாங்குளத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
