Skip to content
Home » மேகாலயா முதல்வர் சங்மா… வேளாங்கண்ணியில் பிரார்த்தனை

மேகாலயா முதல்வர் சங்மா… வேளாங்கண்ணியில் பிரார்த்தனை

  • by Senthil

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் இன்று மேகாலயா மாநில முதல்வர்  கான்ராட் சங்மா பிரார்த்தனை செய்தார். டில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த மேகாலயா முதல்வர், சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வருகைதந்து அங்கிருந்து சாலை மார்கமாக இன்று காலை வேளாங்கண்ணி வந்தார்.

பின்னர் தனது மனைவி மெஹ்தாப் மற்றும் குடும்பத்தினருடன் மேகாலயா மாநில முதல்வர் கான்ராட் கே சங்மா, வேளாங்கண்ணி  ஆரோக்கிய மாதாவை தரிசனம் செய்தார். பேராலயம் வந்த மேகாலயா முதல்வருக்கு நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் மற்றும் பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்குத்தந்தைகள் சார்பாக

சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மேகாலயா முதல்வர் உள்ளிட்டோர் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையை வேண்டி பிரார்த்தனை செய்தனர். அதனை தொடர்ந்து தரிசனத்தை முடித்த மேகாலயா முதல்வர் சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து,விமானம் மூலம் பெங்களூர் செல்ல உள்ளார். மேகாலயா மாநில முதல்வரின் வருகையை அடுத்து நாகை மாவட்ட காவல்துறை சார்பாக வேளாங்கண்ணி பேராலயத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!