திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜமுனாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த காத்தவராயன் மகன் பெருமாள் (55) என்பவர் கட்டிட மேஸ்தி சரியாக செயல்பட்டு வருகிறார். நெஞ்சு வலி காரணமாக நேற்று இரவு 10.55 மணி அளவில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு்ளார்.
இன்று திருப்பத்தூர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் சுமார் 50 அடிக்கு மேல் உள்ள கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வேன் என அலப்பறையில் ஈடுபட்டு வந்தார். பின்னர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பில் இருந்த நகர போலீசார் பெருமாளை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் பெருமாள் மனநலம் பாதிக்கப்பட்டவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வருகிறார் எனவும் கூறப்படுகிறது.
மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் சுமார் 50அடி கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.