நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேல பூதலூர் விவசாயி ராமகிருஷ்ணன் தனது 50 ஏக்கர் வயலில் டெல்டா மாவட்டத்தில் முதல் முறையாக ட்ரோன் மூலமாக விதை தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் குருவை சாகுபடிக்காக நேற்று மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் அதனை நம்பி தற்போது குறுவை சாகுபடிக்காக விதைவிடும் பணியை தொடங்கியுள்ளார் டெல்டா மாவட்டங்களில் பரவலாக குறுவை சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கியுள்ள நிலையில்மனிதர்களைக் கொண்டு ஏக்கருக்கு 30 கிலோ
விதையை பயன்படுத்தி சாகுபடி செய்ய வேண்டிய நிலையில் ட்ரோன் இயந்திரம் மூலம் விதைப்பு பணியில் ஈடுபட்டால் 13 கிலோவில் விதைத்து விடலாம் என தெரிவித்ததோடு ஐந்தே நிமிடத்தில் ஒரு ஏக்கர்விதைப்பு பணியை முடித்து விடலாம் என தெரிவித்தார் மேலும் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் தங்கு தடை இன்றி கடைமடை பகுதி வரை வந்து சேர்வதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.