Skip to content
Home » மேட்டூர் அணை திறப்பு…. விதை தெளிக்கும் பணி துவங்கியது….

மேட்டூர் அணை திறப்பு…. விதை தெளிக்கும் பணி துவங்கியது….

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேல பூதலூர் விவசாயி ராமகிருஷ்ணன் தனது 50 ஏக்கர் வயலில் டெல்டா மாவட்டத்தில் முதல் முறையாக ட்ரோன் மூலமாக விதை தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் குருவை சாகுபடிக்காக நேற்று மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் அதனை நம்பி தற்போது குறுவை சாகுபடிக்காக விதைவிடும் பணியை தொடங்கியுள்ளார் டெல்டா மாவட்டங்களில் பரவலாக குறுவை சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கியுள்ள நிலையில்மனிதர்களைக் கொண்டு ஏக்கருக்கு 30 கிலோ

விதையை பயன்படுத்தி சாகுபடி செய்ய வேண்டிய நிலையில் ட்ரோன் இயந்திரம் மூலம் விதைப்பு பணியில் ஈடுபட்டால் 13 கிலோவில் விதைத்து விடலாம் என தெரிவித்ததோடு ஐந்தே நிமிடத்தில் ஒரு ஏக்கர்விதைப்பு பணியை முடித்து விடலாம் என தெரிவித்தார் மேலும் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் தங்கு தடை இன்றி கடைமடை பகுதி வரை வந்து சேர்வதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!