புதுச்சேரி 16-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையுடன் இன்று தொடங்கியது. அவரைத் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் வரவேற்றார். முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளதாக ஆளுநர் தனது 50 நிமிட உரையில் தெரிவித்தார். இதையடுத்து, சட்டப்பேரவை மாலை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு முதலமைச்சர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
