Skip to content
Home » புதிய பஸ் ரூட்… அமைச்சர் மகேஸ் துவக்கி வைத்தார்..

புதிய பஸ் ரூட்… அமைச்சர் மகேஸ் துவக்கி வைத்தார்..

  • by Senthil

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்துள்ள நடராஜபுரம் ஊராட்சி மக்கள் கல்லணையிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை அரசு மாநகர பேருந்து இயக்க கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கல்லணையிலிருந்து சத்திரம் நோக்கி புதிய மாநகர பேருந்தை மக்களின் பயன்பாட்டுக்காக துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, தலைமை, செயற்குழு உறுப்பினர் சேகரன், ஒன்றிய குழு சத்யா கோவிந்தராஜ், நடராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியாகீதாதாஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!