புதுச்சேரியில் என். ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு போக்குவரத்துத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் சந்திரபிரியங்கா. இவர் இன்று அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்து விட்டார். ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், மற்றும் முதல்வர் ரங்கசாமியிடம் வழங்கினார்.
ராஜினாமா குறித்து அவர் கூறும்போது, நான் பதவியில் இருக்கும்போது என்னை குறிவைத்து தாக்கினர். இனி அதற்கான பதிலை நான் அளிப்பேன் என்றார். சந்திரபிரியங்கா ராஜினாமா புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள். நெடுங்காடு தொகுதியில் இருந்து 2வது முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர்.