புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் 103 -வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மன்னரின் திருவுருவச் சிலைக்கு, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி , மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, மேயர் திலகவதி செந்தில், முன்னாள் திருச்சி மேயர் சாருபாலா தொண்டைமான் மற்றும் மன்னர் குடும்பத்தினர் மாலை அணிவித்தனர்.
மன்னர் பிறந்ததினத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 10, 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு இந்த நிகழ்ச்சியில், மன்னர் குடும்பம் சார்பில் ரொக்கப்பரிசுகளை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
