உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தல் மூலம் கூட்டணி ஆட்சி ஏற்படும். அதிமுகவுக்கு தான் முதல்வர் பதவி. பாஜகவும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்று கூறியிருந்தார்.
இது குறித்து அதிமுகவினர் யாரும் பதில் அளிக்கவில்லை. அதே நேரத்தில் திமுகவை சேர்ந்த அமைச்சர் ரகுபதி, அமித்ஷாவுக்கு பதில் அளிக்கும் வகையில்பேட்டி அளித்து உள்ளார். அதில் கூட்டணி ஆட்சி ஏற்படும் என அமித்ஷா பகல் கனவு காண்கிறார்.அது நடக்காது என கூறி உள்ளார்.