Skip to content
Home » அமைச்சர் செந்தில்பாலாஜி பூரண நலம்பெற வேண்டி திமுகவினர் மொட்டை அடித்து வேண்டுதல்….

அமைச்சர் செந்தில்பாலாஜி பூரண நலம்பெற வேண்டி திமுகவினர் மொட்டை அடித்து வேண்டுதல்….

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி பூரண குணமடைய வேண்டி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் திமுகவினர் 10 பேர் மொட்டை அடித்து வேண்டுதல் நடத்தினர் தொடர்ந்து கோவில் வளாகத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கரூர் தெற்கு மாநகர பகுதி திமுக செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, 41வது வார்டு திமுக செயலாளர் விஸ்வா ஏற்பாடு செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!