Skip to content
Home » ஆவணங்களில் E.D திருத்தம்… அமைச்சர் செந்தில் பாலாஜி மனு..

ஆவணங்களில் E.D திருத்தம்… அமைச்சர் செந்தில் பாலாஜி மனு..

  • by Senthil

கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை 15வது முறையாக, ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதற்கிடையே, தனக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தன்னை கைது செய்யும் நோக்கில், ஆவணங்களில் அமலாக்கத்துறை திருத்தம் செய்துள்ளதாகவும், தங்களுக்கு ஆவணங்கள் முழுமையாக வழங்காமல் விசாரணை தொடர்வது முறையற்றது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. செந்தில்பாலாஜியின் இந்த மனுவுக்கு ஜனவரி 22ஆம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். பின்னர், இந்த வழக்கில் செந்தில்பாலாஜி மீது ஜனவரி 22 அன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என அறிவித்த நீதிபதி அல்லி, அன்றைய தினம் அவரை நேரில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார். கைதாகி சுமார் ஏழு மாதங்கள் ஆகியும் செந்தில் பாலாஜிக்கு இன்னும் ஜாமீன் வழங்கப்படவில்லை. ஏற்கனவே ஜாமீன் கேட்டு இரு முறை மனு தாக்கல் செய்யப்பட்ட போதும் அவை தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!