Skip to content
Home » மாரடைப்பு……காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மரணம்

மாரடைப்பு……காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மரணம்

  • by Senthil

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி  காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான  திருமகன் ஈவெரா(46)   உடல் நலக்குறைவு காரணமாக   இன்று காலமானார்.

திருமகன் ஈவெரா இன்று சென்னையில் இருந்து சொந்த ஊரான ஈரோடு திரும்பினார் . சிறிது நேரத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை  தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிக0ச்சை அளித்தும் பலன் இன்றி அவர் இறந்தார்.   அவர் மாரடைப்பில் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.உடனடியாக அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு  அனைத்து கட்சி நிர்வாகிகளும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் திருமகன் ஈவெரா மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என கூறி உள்ளார்.

திருமகன் ஈவெரா காங்கிரஸ்  தகவல் தொடர்பு அணித்தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில்  திருமகன் ஈவெரா  ஈரோடு கிழக்கு தொகுதியில் 67,300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட  தமாகா வேட்பாளர் யுவராஜா  58,396 வாக்குகள் பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!