2026-27-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் மரிய வில்சன், மூத்த குடிமக்களுக்காக தமிழகம் முழுவதும் 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு இயன்முறை மருத்துவருடன் இணைந்து செயல்படவுள்ள இச்சேவைக்காக பட்ஜெட்டில் ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கிராம பஞ்சாயத்துகளுக்கே நேரடியாக சென்று முதியவர்களுக்கு இலவச உடல் பரிசோதனைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
