Skip to content

கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. கரூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை வேளையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஜவகர் பஜார், தான்தோன்றி மலை, காந்திகிராமம்,பசுபதி பாளையம், சின்ன ஆண்டான் கோவில் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மாலை நேரத்தில் பெய்த மழையின் காரணமாக பள்ளி முடிந்து வீடு செல்லும் மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

error: Content is protected !!