கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள குமாரபாளையம் பகுதியில் இன்று அதிகாலை இடி–மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது அப்பகுதியில் மின்னல் தாக்கியதால் ஆட்டுப்பட்டியில் கட்டப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த ஆடுகளுக்கு பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். மின்னல் தாக்கமே உயிரிழப்புக்குக் காரணம் என கூறினர்.
ஒரே நேரத்தில் 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்ததால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவருக்கு அரசின் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
