தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்திடும் வகையில் திருக்குவளையில் தொடங்கி வைத்தார் . அதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் துவக்கி வைக்க உள்ள நிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர்
தொகுதி போலீஸ் காலனி நவல்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெறும் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விழாவில் கலந்து கொண்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சேர்மன் சத்யா கோவிந்தராஜ், ஒன்றிய கழகச் செயலாளர் கங்காதரன், பொதுக்குழு உறுப்பினர் நவல்பட்டு சண்முகம், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.