Skip to content
Home » உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்து… தாய், மகள் பலி

உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்து… தாய், மகள் பலி

  • by Senthil

திண்டுக்கல் அருகே உள்ள உடுவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அழகுராசு (வயது 45). இடியாப்ப வியாபாரி.  இவர் தனது குடும்பத்தாருடன் நேற்று இரவு  சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். இந்த கார் உளுந்தூர்பேட்டைக்கு 10 கி.மீ.  தொலைவில்  உள்ள ஆசனூர் பகுதியில்  சென்ற போது பின்னால் அதிவேகமாக வந்த சுற்றுலா பேருந்து மீது மோதியது.இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அழகுராசுவின் மனைவி ஜெயா மற்றும் மூத்த மகள் வசந்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் அழகுராசு மற்றும்அவரது இளைய மகள் வைதேகி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். கார் மீது மோதிய வேகத்தில் சுற்றுலா பேருந்தும் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்தபோலீசார், காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!