Skip to content
Home » விரைவில் மாதாந்திர மின் கட்டணம்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்….

விரைவில் மாதாந்திர மின் கட்டணம்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்….

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி  இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் யார்? என்பதில் மர்மம் தொடர்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.  அவரை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.  கிருஷ்ணம்பாளையம், வைராபாளையம் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது.. மாதாந்திர மின்கட்டணம் விரைவில் நடைமுறைக்கு வரும். மின்கட்டணம் கணக்கீடு செய்வதில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு மாதாந்திர கணக்கீடு எடுக்கப்பட்டு மின்கட்டணம் வசூலிக்கப்படும் என்றார் அமைச்சர் செந்தில்பாலாஜி. .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!