Skip to content
Home » அடுத்தவர் வீட்டு குளியலறையில் ரகசிய கேமரா… சென்னை டாக்டர் கைது..

அடுத்தவர் வீட்டு குளியலறையில் ரகசிய கேமரா… சென்னை டாக்டர் கைது..

  • by Senthil

சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர்  இப்ராகிம்(36) பல் மருத்துவரான இவர் தற்போது எம்டிஎஸ் படித்து வருகிறார். இவரது  வீட்டின் இன்னொரு போர்ஷனில்  ஒரு குடும்பம் வாடகைக்கு வசித்து வருகிறது. அந்த வீட்டின் குளியலறையில்   இப்ராகிம் ரகசிய கேமரா பொருத்திய பேனா ஒன்றை ரகசியமாக வைத்திருந்தாராம்.

இதில் சந்தேகம் அடைந்த அந்த வீட்டு பெண், குளியலறையில் இருந்த பேனாவை எடுத்துவந்து தனது கணவரிடம் காண்பித்தார். அப்போது தான் அது  ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு படமெடுக்கும்  கேமரா பொருத்திய பேனா என  அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. இது குறித்து  ராயபுரம் போலீசில் அந்த பெண் புகார் செய்தார்.  போலீசார் விசாரணை நடத்தி மருத்துவ மாணவர் இப்ராகிமை கைது செய்தனர். அவர் இதுபோல வேறு எங்கெல்லாம்  படம் பிடித்தார் என  போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!