Skip to content
Home » கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி.. காரணம் என்ன?

கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி.. காரணம் என்ன?

சென்னை விருகம்பாக்கம், மதியழகன் நகர், கே.கே.சாலையை சேர்ந்தவர் வேல்முருகன் ( 40). கட்டிடத்தொழிலாளி. இவருடைய மனைவி வினோதினி (37). இவர், வீட்டு வேலைகள் செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குடி பழக்கம் கொண்ட வேல்முருகனை வினோதினி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வேல்முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் அவரது உடலில் கத்திக்குத்து காயம் இருப்பதையும் கண்டனர். இதுபற்றி விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் தலைமையிலான போலீசார், வேல்முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் குறித்து வேல்முருகனின் மனைவி வினோதினியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வேல்முருகன் தினமும் குடிபோதையில் தகராறு செய்து வந்தாகவும் இந்த ஆத்திரத்தால் முதலில் கத்தியை அடுப்பில் வைத்து சூடு வைத்தாகவும் வலி தாங்க முடியாமல் வேல்முருகன் தன்னை தாக்கியதால் வேறுவழியின்றி கத்தியால் குத்தியதாக வாக்குமூலம் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!