Skip to content
Home » முரசொலி மாறன் நினைவு தினம்… திருச்சியில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை..

முரசொலி மாறன் நினைவு தினம்… திருச்சியில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை..

  • by Senthil

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 20-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அலுவலகத்தில் முரசொலி மாறனின் திருவுருவப் படத்திற்கு கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என் நேரு தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன், டோல்கேட் சுப்பிரமணி மாவட்ட துணை செயலாளர்கள் விஜயா ஜெயராஜ் கருணாநிதி, பகுதி செயலாளர்கள், நாகராஜ் போட்டோ கமல்,மோகன்தாஸ் கனகராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் துர்கா தேவி புஷ்பராஜ் கலைச்செல்வி ராமதாஸ் சோழன் சம்பத், சிங்காரம் செல்வராஜ் சுரேஷ், கருணாமூர்த்தி, ராதாகிருஷ்ணன் கருத்து கதிரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதனை தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் – அமைச்சர்  மகேஷ் முரசொலி மாறனின் திருவுருவ படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் மாவட்டக்

கழக நிர்வாகிகள் வன்னை அரங்கநாதன் கோவிந்தராஜ் லிலாவேலு மூக்கன் துனைமேயர் திவ்யா பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் பகுதி ஒன்றிய நகர பேரூர் கழகச் செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!