Skip to content
Home » நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு கொலை மிரட்டல்

நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு கொலை மிரட்டல்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் சமூக சீர்திருத்த கருத்துக்களை  பொதுவெளியில் பேசுகவர். அத்துடன்  முற்போக்கு சிந்தனை கருத்துக்களை  உடையவர். இதனால் இவருக்கு  ஒரு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பும், மிரட்டலும் வந்து கொண்டு  இருக்கிறது.

இந்த நிலையில்,  கர்நாடகத்தில் கலபுர்கியில் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களிடம் சனாதன தர்மம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் பேசிய பேச்சும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் பேசுகையில், “சனாதன தர்மத்தைப் பற்றி ஆக்ரோஷமாக பேசுபவர்கள் இந்துக்கள் அல்ல . அவர்கள் இந்துத்துவா ஒப்பந்தக்காரர்கள். அரசியல் உள்நோக்கத்துக்காக இதுபோன்று அவர்கள் பேசுகிறார்கள். அறிக்கைகளை வெளியிடுகின்றனர். இதுபோன்ற அறிக்கைகளுக்குப் பின்னால் உள்ள உள்நோக்கத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், அவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன்” என்று பிரகாஷ் ராஜ் கூறினார்.

இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள அசோக்நகர் காவல் நிலையத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘சனாதன தர்மம் குறித்து கருத்து தெரிவித்ததற்காக தன்னையும், தன் குடும்பத்தினரையும் யூடியூப்பில் அச்சுறுத்தும் வகையில் கொலைமிரட்டல் விடுத்து ஒருவர் பேசியுள்ளார். ஸ்டாலினையும், பிரகாஷ்ராஜையும் முடிக்க வேண்டுமா? இந்துக்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா? என அவர் வீடியோவில் பேசியுள்ளனர். எனவே, அவர் மீதும், அந்த யூடியூப் சேனல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!