Skip to content
Home » முசிறி வியாபாரியிடம் வழிப்பறி…3 வாலிபர்கள் கைது

முசிறி வியாபாரியிடம் வழிப்பறி…3 வாலிபர்கள் கைது

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் சேருகுடியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (30) . இவர் லோடு ஆட்டோவில் பூண்டு விற்பனை செய்து  வருகிறார். கடந்த 14ம் தேதி தண்டலைப்புத்தூர் பகுதியில் பூண்டு விற்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது நான்கு பேர் பைக்கில் வந்து லோடு ஆட்டோவை வழிமறித்துள்ளனர்.
பூண்டு வியாபாரி சுரேஷ்குமாரை அசிங்கமாக திட்டி அவரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

சுரேஷ்குமார் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த வழிப்பறி திருடர்களில் ஒருவன் பூண்டு வியாபாரி சுரேஷ்குமாரின் காதை பிடித்து கடித்துள்ளார்.

இதில் சுரேஷ் குமார் காதில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது இதில் வலி தாங்காமல் சுரேஷ் அலறியபோது அவர் அணிந்திருந்த அரை பவுன் மோதிரம், மற்றும் பூண்டு விற்றுவிட்டு வைத்திருந்த பணம் ரூ 5,300 பறித்துக் கொண்டு நடந்த சம்பவத்தை வெளியில் கூறக்கூடாது என மிரட்டி விட்டு பைக்கில் ஏறி வாலிபர்கள்
தப்பிவிட்டனர்.

சம்பவ இடத்திலிருந்து தப்பி வந்த சுரேஷ்குமார் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.மருத்துவமனையில் இருந்து முசிறி காவல் நிலையத்திற்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் போலீசார் சுரேஷ் இடம் விசாரணை மேற்கொண்டு புகார் மனுவை பெற்றனர்.தகவல் அறிந்த முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மேற்பார்வையில் வழிப்பறியில் ஈடுபட்ட திருடர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ், தண்டலை புத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போதுஅந்த வழியாக பைக்கில் வந்த மூன்று வாலிபர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக  தகவல்களை கூறினர். சந்தேகம் அடைந்த போலீசார் வாலிபர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் முசிறி அருகே உள்ள தண்டலைப்புத்தூரை சேர்ந்த அலெக்சாண்டர் ( 24 ), பிரபாகரன் ( 28,) விக்னேஷ் பாரதி ( 24 )என்பதும் தெரியவந்தது.

தொடர் விசாரணையில், பூண்டு வியாபாரி
சுரேஷ்குமாரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவர்களுடன் சேர்ந்து வழிப்பறியில்
ஈடுபட்டது
மற்றொருவர் தண்டலைப்புத்துரை சேர்ந்த சுரேஷ்குமார் என்பதும் தெரிய வந்தது .இவர்களிடம் 3 ஆயிரம் ரொக்கம்,இவர்கள் வழிப்பறிக்கு பயன்படுத்திய இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புடைய பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து முசிறி குற்றவியல் மநீதிமன்றத்தில் ஆஜர் செய்து, சிறையில் அடைத்தனர் .மேலும் தலைமறைவாக உள்ள சுரேஷ்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!