நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியம் வானவன்மகாதேவி மீனவர் காலனியைச் சேர்ந்த நாகப்பன் என்பவருக்கு சொந்தமான படகில் சுப்பிரமணியன், சுந்தரமூர்த்தி, ராஜகோபால், மகாலிங்கம், ஆகிய ஐந்து மீனவர்களும் அதேபோல் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் செல்வம், முருகானந்தம், சுப்பிரமணியன், சண்முகவேல் ஆகிய நான்கு மீனவர்களும் நேற்று மதியம் புறப்பட்டு கோடியைகரைக்கு தென்கிழக்கில் கடற் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது இலங்கையைச் சேர்ந்த ஒருப்படக்கில் வந்த தமிழ் பேசிய 4 நபர்கள் படகில் ஏறி மீனவர்களை நிர்வாணப்படுத்தி கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர் . அதேபோல் மற்றொரு படகில் இன்னொரு பகுதியில் மீன் பிடித்துக்
கொண்டிருந்த மீனவர்களின் படகில் ஏறி கூர்மையான ஆயுதங்களால் தாக்கி சுமார் 1000 கிலோ மீன் பிடி வலை, ஜிபிஎஸ் கருவி, பேட்டரி, வாக்கி டாக்கி, மொபைல் போன், ஷீலா மீன், வெள்ளி செயின், அரஞ்சான் கயிறு உள்ளிட்ட சுமார் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அங்கிருந்து மீனவர்கள் உயிர் பயத்துடன் கரை திருப்பி உள்ளனர் வானவன் மகாதேவி கடற்கரையில் அவர்களை சக மீனவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்பொழுது அங்குள்ள மீனவ பெண்கள் அழுதது பார்ப்போரை கண் கலங்க வைத்தது. கடற்கொள்ளையர்கள் தாக்குவதை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என மீனவ பெண்கள் கதறிய சோகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தற்பொழுது நாகை மாவட்டத்தில் மீனவர்கள் தாக்கப்படுவது அன்றாடம் தொடர்கதையாக உள்ளது இதனை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை எனவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.