Skip to content
Home » நாகை மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கத்தியால் வெட்டி கொலைவெறி தாக்குதல்..

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கத்தியால் வெட்டி கொலைவெறி தாக்குதல்..

நாகை மாவட்டம், செருதூர் மீன்பிடி துறைமுகத்திலிருந்த எண்முருகன் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் அவர் உள்ளிட்ட அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த முருகவேல், முத்து, சின்னையன் ஆகிய நான்கு மீனவர்கள் கோடியக்கரை அருகே 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் நேற்று கடலில் வலையை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு அதிவேக படகில் வந்த இலங்கை கடற் கொள்ளையர்கள் 3, பேர், நாகை மீனவர்களின் பைபர் படகை சுற்றி வளைத்துள்ளனர். பின்னர் மீனவர்களின் படகில் ஏறிய இலங்கை கடற்கொள்ளையர்கள், அதிலிருந்த மீனவர்களை தடி மற்றும் கத்தியால் வெட்டி கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனை தடுத்த படகு உரிமையாளர் எண்முருகனுக்கு தலையிலும் கையிலும் வெட்டு விழுந்தது. இதில் அந்த மீனவர் படகிலேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்துள்ளார். இதனைக் கண்டு அச்சத்தில் உறைந்த மற்ற மீனவர்கள் மூவரும் உயிருக்கு பயந்து கடலில் பாய்ந்து நீந்தியுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு அட்டூழியத்தில் ஈடுபட்ட இலங்கை கடல் கொள்ளையர்கள், படகில் இருந்த வலை, ஜிபிஎஸ் கருவி மற்றும் 5, லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்களை பறித்துக் கொண்டு அங்கிருந்து

தப்பி சென்றுள்ளனர். பின்னர் 45 நிமிடம் கடலில் நீந்தி உயிருக்கு போராடிய நாகை மீனவர்கள் நீந்தி வந்து, படகில் ஏறி அதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மீனவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று அதிகாலை கொண்டு வந்து சேர்த்தனர். கொலைவெறி தாக்குதலால் படுகாயம் அடைந்த மீனவர் எண்முருகனுக்கு தலையிலும் கையிலும் என 20 தையல் போட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மற்ற அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மூன்று மீனவர்களுக்கும் முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, நாகை மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கத்தியால் வெட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தி ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி தளவாட பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மீனவர்கள் மத்தியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!