Skip to content
Home » நாகை….. நடுக்கடலில் மீனவர்கள் மோதல்….. 2 பேர் கொலை….. பதற்றம்

நாகை….. நடுக்கடலில் மீனவர்கள் மோதல்….. 2 பேர் கொலை….. பதற்றம்

  • by Senthil

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அதே பகுதியை சேர்ந்த ஆத்மநாதன் ,சிவநேசசெல்வம் இவரது சகோதரர் காளத்திநாதன் ஆகிய மூவரும்  மீன்பிடிக்க சென்றனர்.

நாகை துறைமுகத்திற்கு கிழக்கே 2 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கீச்சாங்குப்பத்தை சேர்ந்த

கோகிலா என்பவருக்கு சொந்தமான விசைப்படகு ஆத்மநாதன் கடலில் விரித்து வைத்திருந்த பைபர் படகு

வலைகளை அறுத்துச் சென்றது. இதை இவர்கள் எதிர்த்துக் கேட்டதால் விசைப்படகில் இருந்தவர்கள் கோபமடைந்து பைபர் படகின் மீது விசைப்படகை மோதினர். இதனால் பைபர் படகு கவிழ்ந்தது. இதில் பைபர் படகில் இருந்த 3 பேரும் கடலுக்குள்  விழுந்தனர். கவிழ்ந்த படகை பிடித்துக்கொண்டு 3 பேரும்  உயிர் பிழைக்க நீந்தினர்.

அந்த நிலையிலும்  விசைப்படகில் இருந்தவர்கள் ஆயுதங்களால் தாக்கினர்.  இதில்  ஆத்மநாதன் என்பவருக்கு இடது கண் மற்றும் வலது கையில் காயம் ஏற்பட்டது.  மற்றவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.  3 பேரும் கடலில் உயிருக்கு போராடினர்.

அப்போது அவ்வழியே வந்த நம்பியார் நகரைச் சேர்ந்த மீனவர்கள்   உயிருக்கு போராடிக்கொண்டிருந்த  சிவநேச செல்வம், ஆத்மநாதன் ஆகியோரை , தங்கள் படகில் ஏற்றி நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  இதில் சிவநேசசெல்வம்  மரணமடைந்தார். ஆத்மநாதன்  ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். .காளத்திநாதனை தேடிவந்தனர்.  இன்று அவரது உடலையும் மீட்டனர்.

நடுக்கடலில் 2 மீனவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகை மீனவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால்  இரண்டு கிராமங்களிலும்  போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். இந்த கொடூர கொலை சம்பந்தமாக எட்டு பேரை கோடியக்கரை அருகே போலீசார் கைது செய்தனர். மாவட்ட எஸ்.பி ஹர்ஷ் சிங்கும்  இரண்டு கிராமங்களிலும் நேரில் ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!