Skip to content
Home » நாகை அருகே பல லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்…

நாகை அருகே பல லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்…

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா, மது கடத்தல், புகையிலை விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாகூரை அடுத்த தெத்தியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை முட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக நாகூர் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தெத்தி ஜம்மியத் நகரில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது முகம்மது சித்திக் என்பவரது வீட்டில் மூட்டை, மூட்டையாக அடுக்கி வைத்த பட்டிருந்த குட்கா, பான்மசாலா, கூலிப் உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார்

கண்டுபிடித்தனர். இதனையடுத்து 24 மூட்டைகளில் இருந்த 300 கிலோ மதிப்புள்ள புகையிலை பாக்கெட் முட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போதை பொருளை கடத்திய முகம்மது சித்தீக் என்பவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஒருவரை நாகூர் போலீசார் தேடி வருகின்றனர். 2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான கைப்பற்றப்பட்ட போதை பொருட்களை நாகூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் நேரில் பார்வையிட்டு போலீசாரை பாராட்டினார்.இதில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், நாகூர் காவல் ஆய்வாளர் சதீஷ்குமார்,முதல் நிலை காவலர்கள் மதியழகன், காமேஷ்,உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!