தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வரும் நிலையில் மக்கள் பிரதிநிதிகள், திரைப்பிரபலங்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதன்படி நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மண்பானையில் பொங்கல் வைத்து தொகுதி மக்கள் மற்றும் விசிக-
வினருடன் சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸ் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். கரும்பு மற்றும் தோரணங்களால் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அலங்கரிக்கப்பட்ருந்த நிலையில், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து, மண்பானையில் பொங்கல் வைத்த சூரிய பகவானுக்கு படையலிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் தொகுதி மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.