Skip to content
Home » நாகயில் நகைக்காக மூதாட்டியை கொன்ற கும்பல் தப்பி ஓட்டம்….. பரபரப்பு…

நாகயில் நகைக்காக மூதாட்டியை கொன்ற கும்பல் தப்பி ஓட்டம்….. பரபரப்பு…

  • by Senthil

நாகை கீரைக்கொல்லைத்தெரு பகுதியை சேர்ந்தவர் 67 வயதான மூதாட்டி சரோஜா. கணவர் சண்முகசுந்தரம் உயிரிழந்த நிலையில், அவரது மூத்த மகன் கோவிந்தராஜ் சென்னையிலும், மற்றொரு மகன் புதுச்சேரியில் பிரபல பத்திரிகையிலும், பணியாற்றி வருவதால் சரோஜா தனிமையில் வசித்து வருகிறார். மூதாட்டி தனியாக வசித்து வருவதை தொடர்ச்சியாக நோட்டமிட்டு வந்த மர்மகும்பல் ஒன்று மூதாட்டியின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி இன்று அதிகாலையில் வீடு புகுந்த மர்ம நபர்கள் மூதாட்டி உறங்கிகொண்டிருந்தபோது அலமாரியை உடைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனை சுதாரித்து

அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கூச்சலிடவே அவரின் கழுத்தை நெரித்தும், தலையணை கொண்டு முகத்தில் வைத்தில் அமுக்கியும் கொலை செய்துள்ளனர். பின்னர் வீட்டில் பணம் எதுவும் இல்லாததால், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி, மற்றும் காதில் இருந்த தோடுகளையும் மர்ம கும்பல் திருடி சென்றுள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து வழக்கம்போல இன்று காலை தனது தாயிக்கு மகன் கோவிந்தராஜ் போன் செய்துள்ளார். ஆனால் பலமுறை தொடர்பு கொண்டும் சரோஜா அலைபேசி அழைப்பை எடுக்காத நிலையில்

பக்கத்து வீட்டில் வசிப்பவர்களை பார்க்கசொல்லி கேட்டுக்கொண்டுள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினர் நீண்டநேரம் கதவை தட்டியும் மூதாட்டி திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது படுக்கையறையில் மூதாட்டி உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்தில் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் கொண்டு நாகை நகர காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மூதாட்டி உயிரிழப்பு குறித்து விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறவினர்களிடம் உறுதியளித்தார். நாகையில் வீடுகள் நிறைந்த பகுதியில் மூதாட்டி நகைக்காக கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!