நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் கெம்ப்ளாஸ்ட் சன்மார் லிமிடெட் எனும் தனியார் உப்பு தொழிற்சாலை உள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்களும், 500-க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்களும் உள்ளனர் , தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஒரு டன் உப்பு உற்பத்தி செய்தால் 99 ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு டன் உப்பிற்கு 150
ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் மராமத்து பணியில் ஈடுபடுபவர்களுக்கு 500 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் ஊழியர்களின் படித்த வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும், 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உப்பள தொழிற்சங்க தலைவர் கனகசுந்தரம் தலைமையில் பணிக்கு செல்லாமல் தொழிற்சாலை முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.