Skip to content
Home » நாகை, வேளாங்கண்ணியிலும் கடைகள் அடைப்பு

நாகை, வேளாங்கண்ணியிலும் கடைகள் அடைப்பு

  • by Senthil

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும்  காவிரி நீர் பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் அனைத்து கட்சி சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வணிகர்கள் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர், திருமருகல்,கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம், திருப்பூண்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 20,000க்கும் மேற்பட்ட கடைகளும் 3000 உணவகங்களையும் அடைத்து ஆதரவு தெரிவித்துள்ளனர் இதில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான பால்,மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 13 மத்திய அரசு அலுவலகங்கள் முன்பும், முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது. இதற்காக ஆங்காங்கே விவசாயிகள் காலை முதல் திரண்ட வண்ணம் இருந்தனர். இதனால்  மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!