Skip to content
Home » நாகர்கோவிலில் இன்று……தோள்சீலை போராட்ட 200ம் ஆண்டுபொதுக்கூட்டம்….ஸ்டாலின், பினராயி விஜயன் பங்கேற்பு

நாகர்கோவிலில் இன்று……தோள்சீலை போராட்ட 200ம் ஆண்டுபொதுக்கூட்டம்….ஸ்டாலின், பினராயி விஜயன் பங்கேற்பு

200 ஆண்டுகளுக்கு முன் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் சில சமூகத்தை சேர்ந்த பெண்கள் தோள்சீலை அணியக்கூடாது என்ற நடைமுறை இருந்தது. இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து 1822-ம் ஆண்டு தோள்சீலை அணியும் போராட்டத்தை பெண்கள் தொடங்கினர். பின்னர் இந்த போராட்டம் தீவிரமடைந்து இந்த முறையை நீக்க காரணமாக அமைந்தது. இதனை நினைவுப்படுத்தும் விதமாக 200-வது ஆண்டு நிறைவு தோள்சீலை போராட்ட பொதுக்கூட்டம் நாகர்கோவில் நாகராஜா திடலில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அவருடன் கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனும் கலந்து கொண்டு பேசுகிறார். இரு மாநில முதல் அமைச்சர்கள் பங்கேற்பதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!