Skip to content
Home » நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கம்… தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கம்… தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் , நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்கள் – மாணவர்கள் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பிலான மாபெரும் கையெழுத்து இயக்கம்  தொடங்கவுள்ளது. இந்த கையெழுத்து இயக்கத்தை சென்னை கலைவாணர் அரங்கில், மருத்துவ அணி – மாணவர் அணி நிர்வாகிகளுடன் நாம் தொடங்கி வைக்கவுள்ளோம்.

நீட் ஒழிப்புக்கான இந்த முன்னெடுப்பு, கழக மாவட்டங்கள்தோறும் ஒரே நேரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிகழ்வுகளில், பொதுமக்கள் – பெற்றோர்கள் – மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்று கையெழுத்து இடுமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும் – நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவையும் காப்பதற்காக இடப்படும் ஒவ்வொரு கையெழுத்தும் மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நீட் தேர்வை ஒழிக்க மக்கள் இயக்கமாக ஓரணியில் திரள்வோம்  என்று அழைப்பு விடுத்திருந்தார்.

udhayanidhi-3

சென்னையில் நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுக அணிகள் முன்னெடுக்கும் நீட் விலக்கு நம் இலக்கு மாபெரும் கையெழுத்து இயக்கத்தை முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!