Skip to content
Home » ஜவஹர்லால் நேரு நினைவு தினம்…… திருச்சியில் அனுசரிப்பு

ஜவஹர்லால் நேரு நினைவு தினம்…… திருச்சியில் அனுசரிப்பு

நவீன இந்தியாவின் சிற்பி முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவர்கலால் நேரு  நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு திருச்சி சேவா சங்கம் பள்ளி எதிரே உள்ள  நேரு  திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம். சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்கள் கள்ளத்தெரு குமார், கள்ளிக்குடி குமார், சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், மார்க்கெட் மாரியப்பன், வழக்கறிஞர் பிரிவு சுகன்யா, சிவகாமி ,சுப்பிரமணியன், நிர்மல் குமார், கோகுல் கிருஷ்ணமூர்த்தி சகாயராஜ் ,பொறியாளர் பிரிவு முகமது நசீர் ,ஆட்டோ பாலு ,சோசியல் மீடியா செந்தில்குமார் ,உறையூர் விஜி, பொன்மலை கோட்டத் தலைவர் பாலசுந்தர், ரவி சுந்தரம், ஜிம் விக்கி, கலைப்பிரிவு ராஜீவ் காந்தி, சண்முகம், சாகிர் சரவணன், அரவிந்த், சுதாகர் ,நாச்சி குறிச்சி அருண் பிரசாத், திம்மை செந்தில் குமார், திம்மை முருகன், புவன் ஸ்ரீராம் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!