Skip to content
Home » நெல்லை காங். தலைவர்ஜெயக்குமார் கொலை? எரிந்த நிலையில் உடல் கண்டுபிடிப்பு

நெல்லை காங். தலைவர்ஜெயக்குமார் கொலை? எரிந்த நிலையில் உடல் கண்டுபிடிப்பு

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்  ஜெயக்குமார். இவரை கடந்த 2ம் தேதி இரவு 7.45 மணியில் இருந்து காணவில்லை. அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அவரை யாரும் கடத்திச் சென்றிருக்கலாம் என  ஜெயக்குமாரின் மகன்  கருத்தையா ஜாப்ரின் உவரி போலீசில் புகார் செய்தார். அதில் கடந்த  சில நாட்களாக ஜெயக்குமாருக்கு கொலை மிரட்டல் வந்து கொண்டிருந்தது.  இது தொடர்பாக அவர் கடந்த 30 ம் தேதி போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் அவர் மாயமாகி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என கூறி உள்ளார். புகாரைத் தொடர்ந்து ஜெயக்குமாரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

இதற்கிடையே இன்று காலை  11 மணி அளவில்  காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் அவரது வீடு அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா  என போலீசார் விசாரிக்கிறார்கள். மாவட்ட காங்கிரஸ் தலைவர்   மர்ம சாவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!