Skip to content

26 நெசவாளர்களுக்கு பணி ஆணை வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி….

  • by Authour

கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு தலா 4 லட்சம் ரூபாய் வீதம் 26 நெசவாளர்களுக்கு பணி ஆணைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு வீடு கட்டுவதற்காக தலா 4 லட்சம் வீதம் 26 நெசவாளர்களுக்கு 1.04 கோடி மதிப்பிலான பணி ஆணைகளை மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று வழங்கினார்.இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த கைத்தறிவு உதவி இயக்குனர் சிவகுமார், சிறுமுகை பகுதியில் கைத்தறி

பூங்கா அமைப்பதற்கு அமைச்சர் கூறி உள்ளதாகவும் முதற்கட்ட பணிகள் இந்த வருடத்தில் துவங்க கூடும் என தெரிவித்தார் மேலும் நீலகிரி பகுதியில் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக தோடர் மக்களுக்காக கூட்டுறவு சங்கம் அமைக்க மாநில கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதனையும் கூடிய விரைவில் அமைச்சர் திறந்து வைப்பார் என தெரிவித்தார்.இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த் குமார், கைத்தறி உதவி இயக்குனர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!