இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் திராவிட வரலாறு குறித்த ஆய்வு மேற்கொள்ளும் நோக்கில், புதிய ஸ்காலர்ஷிப் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகனான சபரீசன் தொடங்கியுள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்தவரும், திராவிட இயக்கத்தின் முக்கிய அடையாளமாகவும் திகழ்ந்த மறைந்த கருணாநிதியை கவுரவிக்கும் விதமாக, அவரது பெயரில் இந்த உதவித்தொகை (scholarship) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திராவிட வளர்ச்சி திட்டங்களின் மையமாக கருணாநிதி கொண்டிருந்த சமூகநீதி, கல்விக்கான அணுகல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை திட்டம் நினைவுகூறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தனித்துவமான வளர்ச்சிப் பாதையைப் பற்றிய உலகளாவிய புரிதலை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டிருப்பதோடு, அசல் புலமையை ஊக்குவிக்கும். தமிழ்நாட்டில் சாதி, மாநில திறன், நலன்புரி மற்றும் அடிமட்ட அரசியல் அணிதிரட்டல் போன்ற கேள்விகளில் நிலையான ஈடுபாட்டை செயல்படுத்தும். கேம்பிரிட்ஜின் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பள்ளியில் இந்த ஸ்காலர்ஷிப் மூலம் பயன் பெறலாம்.