ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டாக அறிவித்தவர் ஜூலியஸ் சீசர். இவர் ரோம பேரரசின் சர்வாதிகாரியாக இருந்தவர். கி.மு. 60ல் இவர் ரோமை ஆண்டார். இவர் தான் ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டாக அறிவித்தவர். பிற்காலத்தில் இவர் எகிப்தின் இளவரசியும், உலகப்பேரழகியுமான கிளியோபாட்ராவையும் திருமணம் செய்தவர். இவரது பெயரைக்கொண்டு தான் ஜூலை மாதம் அழைக்கப்படுகிறது.
இன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு முதன்முதலில் பிறக்கும் நாடு எது என்றும் கடைசியில் பிறக்கும் இடம் எது என்றும் பார்க்கலாம்.ஆங்கில புத்தாண்டு முதல் முதலில் பிறகும் இடம் சாமோவோ மற்றும் கிறிஸ்துமஸ் தீவு. சாமோவோ நியூசிலாந்து அருகே உள்ள தீவு. கிறிஸ்துமஸ் தீவு ஆஸ்திரேலியாவின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதி. இங்கு இந்திய நேரப்படி நேற்று மாலை 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.
அதைத்தொடர்ந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என புத்தாண்டு பிறந்தது. இந்திய நேரப்படி இன்று பகல் 12 மணிக்கு அமெரிக்காவில் புத்தாண்டு பிறந்தது. இன்று மாலை 5 .30 மணிக்கு தான் அமெரிக்காவில் உள்ள ஹோவர்ட் தீவில் புத்தாண்டு பிறக்கும். இது தான் கடைசியாக புத்தாண்டு பிறக்கும் இடமாகும்.