சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்து நீர்வளத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் 202 இடங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில் சென்னையில் 76 பணிகள் ரூ.22.70 கோடியிலும், பிற மாவட்டங்களில் 126 பணிகள் ரூ.19.30 கோடியிலும் நடைபெற உள்ளன. பக்கிங்ஹாம் கால்வாய், பாலாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
