மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் இன்று (செப்.4) அதிகாலை 2.35 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த 9 பச்சிளம் குழந்தைகளை செவிலியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்டபோது குழந்தைகள் மீட்கப்பட்ட பரபரப்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. தொடர்ந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
