Skip to content
Home » நர்சிங் மாணவி மாயம்…. திருச்சியில் புகார்..

நர்சிங் மாணவி மாயம்…. திருச்சியில் புகார்..

  • by Senthil

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் காத்தலிங்கம். இவரது மகள் சந்தான லட்சுமி ( 17) இவர் டிப்ளமோ நர்சிங் பயிற்சி படித்து வருகிறார். இந்நிலையில் இவர் புத்தூர்  பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில்
பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற சந்தானலட்சுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை காத்தலிங்கம் உறையூர் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து  சந்தானலட்சுமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!