நெல்லைக்கு விரைந்த சென்னை தனிப்படைப் போலீசார், இரகசியத் தகவலின் அடிப்படையில் குற்றவாளிகள் பதுங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்டனர். தப்பியோட முயன்ற 7 பேரையும் துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரையும் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்குக் கொண்டு வந்த தனிப்படையினர், கொரட்டூர் காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு இந்த வழிப்பறியில் எவ்வாறு தொடர்பு இருந்தது மற்றும் வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்துப் போலீசார் முழுமையாகத் துப்புத்துலக்கி வருகின்றனர்.
