குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர்நிலைகளில் இருந்த முதலைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தன. நள்ளிரவில் ஒரு வீட்டின் குளியலறைக்குள் 7 அடி நீள முதலை நுழைந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு முதலையைப் பிடித்து, காயமின்றி அருகில் உள்ள குளத்தில் பத்திரமாக விடுவித்தனர். நீர்நிலைகளுக்கு அருகில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
